கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், நேற்று, (ஆகஸ்ட் 3) ஒரே நாளில் 555.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், நேற்று, (ஆகஸ்ட் 3) ஒரே நாளில் 555.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கோவை, வால்பாறை, பொள்ளாச்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நேற்று மதியம் துவங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. இதனால் மாநகரின் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் நீர் வெள்ளம் போல் ஓடியது.
தென்மேற்கு பருமழை காரணமாக நொய்யல் ஆறு, கோவை குற்றாலம் ஆகியவற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், பில்லூர் அணைக்கு 12 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்லூர் அணையின் கொள்ளளவான 100 அடியில் 97 அடி நிரம்ப உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 9 மணிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
கோவையில் பெய்த மழை அளவு விவரம்:
கோவை விமானநிலையம்-2 மி.மீ., சிங்கோனா - 105 மி.மீ., சின்னகல்லார்-108 மி.மீ., வால்பாறை பி.ஏ.பி.-86மி.மீ., வால்பாறை தாலுகா-85 மி.மீ. சோலையாறு-126 மி.மீ., ஆழியாறு 12 மி.மீ.,பொள்ளாச்சி 20 மிமீ, கோவை தெற்கு-5 மி.மீ., வேளாண்மை பல்லைக்கழகம்- 6.5 மி.மீ. என ஒரே நாளில் 555.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.