திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்!

திருப்பூர்: திருப்பூர் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில் இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில் இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கொடுவாயில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு, திருப்பூர் மாவட்டம் பொள்ளிகாளிபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில் முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.



இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த சாமிநாதன், ரத்தினம் (கணவன், மனைவி) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



மேலும், காரில் பயணம் செய்த சுபாஷ் என்ற கல்லூரி மாணவன் ஒருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரில் இருந்த மற்ற நான்கு மாணவர்களும் படுகாயமடைந்தனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த மூன்று பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, படுகாயமடைந்த நான்கு பேரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.



இதனிடையே, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டல் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். கல்லூரி மாணவன் காரை அதிவேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...