கோவை: பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கோரி சார் ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கோரி சார் ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகர்ப்புறப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த நான்கு வருடங்களாக 110 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. மேலும், 90 கோடி கூடுதலாக பெற்று ரூ.180 கோடி செலவில் பணிகள் நடந்து வந்தாலும் பொள்ளாச்சி நகர சாலைகள் எல்லாம் பாதாள சாக்கடை திட்ட குழிகள் மூடாததால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இந்த நிலையில், பணிகளை விரைந்து முடிக்க கோரி நகராட்சி ஆணையாளர் மற்றும் சார் ஆட்சியாளர் அவர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, பொள்ளாச்சி கொரோனா வைரஸ் தொற்றுப் பரவியுள்ள சூழ்நிலையில் பல இடங்களில் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புற பகுதிகளில் ராகவேந்திரா மண்டபம் ரோடு, மார்க்கெட் ரோடு, ரயில் நிலையம் செல்லும் ரோடு, மாட்டு சந்தை முன்பு உள்ள ரோடு, வெங்கட்ரமணர் வீதி, நியூ ஸ்கீம் ரோடு என பல இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.

மேலும், பாதாள சாக்கடை குழிகள் தோண்டப்படும் போது குடிநீர் குழாய் உடைக்கப்படுகிறது.

சரி செய்யாமல் மூடிவிட்டுச் சென்றுவிடுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இத்திட்டம் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி திட்டமாக உள்ளது எனவும் கடந்த நான்கு வருடங்களாக பொள்ளாச்சி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவதாக சார் ஆட்சியரிடம் மனு அளித்ததாக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, நகரக் கழகச் செயலாளர் டாக்டர் வரதராஜன், அமுதபாரதி, கார்த்திகேயன், பெருமாள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகர்ப்புறப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த நான்கு வருடங்களாக 110 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. மேலும், 90 கோடி கூடுதலாக பெற்று ரூ.180 கோடி செலவில் பணிகள் நடந்து வந்தாலும் பொள்ளாச்சி நகர சாலைகள் எல்லாம் பாதாள சாக்கடை திட்ட குழிகள் மூடாததால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இந்த நிலையில், பணிகளை விரைந்து முடிக்க கோரி நகராட்சி ஆணையாளர் மற்றும் சார் ஆட்சியாளர் அவர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, பொள்ளாச்சி கொரோனா வைரஸ் தொற்றுப் பரவியுள்ள சூழ்நிலையில் பல இடங்களில் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புற பகுதிகளில் ராகவேந்திரா மண்டபம் ரோடு, மார்க்கெட் ரோடு, ரயில் நிலையம் செல்லும் ரோடு, மாட்டு சந்தை முன்பு உள்ள ரோடு, வெங்கட்ரமணர் வீதி, நியூ ஸ்கீம் ரோடு என பல இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.
மேலும், பாதாள சாக்கடை குழிகள் தோண்டப்படும் போது குடிநீர் குழாய் உடைக்கப்படுகிறது.
சரி செய்யாமல் மூடிவிட்டுச் சென்றுவிடுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இத்திட்டம் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி திட்டமாக உள்ளது எனவும் கடந்த நான்கு வருடங்களாக பொள்ளாச்சி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவதாக சார் ஆட்சியரிடம் மனு அளித்ததாக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, நகரக் கழகச் செயலாளர் டாக்டர் வரதராஜன், அமுதபாரதி, கார்த்திகேயன், பெருமாள் மற்றும் பலர் உடனிருந்தனர்.