திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறியோடு பரிசோதனைக்கு வருபவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கொரோனா பாதிப்பில் இறந்தவர்கள் உடலை தனியாக வைப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மேலும், நாளுக்கு நாள் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் மற்றும் வீடுகளுக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும், ரத்த வங்கிக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறியோடு பரிசோதனைக்கு வருபவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கொரோனா பாதிப்பில் இறந்தவர்கள் உடலை தனியாக வைப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
மேலும், நாளுக்கு நாள் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் மற்றும் வீடுகளுக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும், ரத்த வங்கிக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.