திருப்பூர் மாவட்டத்தில் தொலைபேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தொலைபேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தொலைபேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் இன்று துவக்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறாமல் இருந்து வந்தன.



இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் தொலைபேசி வாயிலாக திங்கட்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், இன்று காலை 11 மணி முதல் தொலைபேசி வாயிலாக பொது மக்களிடமிருந்து குறைகள் பெறப்பட்டன.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த 0421-2969999 என்ற தொலைபேசி எண்ணில் வந்த அழைப்புகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாக பேசி சம்பந்தப்பட்ட துறைக்கு குறைகளை பரிந்துரைத்தார்.

மேலும், ஊரடங்கு உத்தரவு முடியும் வரை தொலைபேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...