கோவை: திமுக ஆதரவாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: திமுக ஆதரவாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை பந்தயசாலை பகுதியில் நடைபெற்ற ரக்க்ஷா பந்தன் நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேசிய கல்வி கொள்கை அனைத்து தரப்பினரின் கருத்துகள் கேட்ட பிறகு கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் கூடுதல் மொழி படிப்பது குழந்தைகளுக்கு பலம் எனவும் பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் கல்வி நிலையங்களை விரும்புகின்றனர் என்றார்.
அதேபோல, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாவது மொழி படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது எனவும் இரு மொழிக் கொள்கை நீடிக்கும் என்ற முதலமைச்சரின் அறிக்கை எங்களுக்கு ஏமாற்றம் தருவதாக தெரிவித்த அவர், பாஜக எந்த மொழியையும் திணிக்கவில்லை எனவும் மூன்றாவது மொழி கற்க வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும், திராவிட கட்சியை சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது கல்வி கற்றுத் தரப்படுகிறது எனவும் அவர்களின் பிள்ளைகள் 3வது மொழி படிக்கிறார்கள் என கூறிய அவர், திமுக ஆதரவாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெள்ளை அறிக்கை விட வேண்டும் என தெரிவித்தார்.
தீண்டாமைக்கு எதிராக பாஜக நாடு முழுவதும் பணி செய்து வருகின்றனர் எனவும் திராவிட கட்சியினர் தான் ஆணவக் கொலை செய்து வருகின்றனர் என குற்றம்சாட்டிய அவர், தாய் மொழியில் கல்வி கொடுக்க வேண்டும் என புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது எனவும் அதிமுக, திமுக மற்றும் எதிர்கட்சிகள் மொழி அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெறுவதாகவும் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடங்கள் வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவிக்க தயாரா எனவும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.