காவல் நிலையங்களில் நடந்த சித்திரவதைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்!

கோவை: காவல் நிலையங்களில் நடந்த சித்திரவதைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: காவல் நிலையங்களில் நடந்த சித்திரவதைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பாக காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தென்காசி விவசாயி முத்து படுகொலை, ராணிப் பேட்டையில் இளம்பெண் மீது காவல்துறை நடத்திய தாக்குதல், சாத்தான் குளம் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தென்காசி அணைக்கரை விவசாயி முத்துவை கொலை செய்த வனத்துறை காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ராணிப்பேட்டை ஷாலினி மற்றும் அவரது குழந்தையை சட்டவிரோதமாக கைது செய்து சித்திரவதை படுத்திய காட்பாடி ஆய்வாளர் புகழ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டை படுகொலையில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் வெண்ணிலா, நீதித்துறை நடுவர் சரவணன், காவல் நண்பர்கள் குழு ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தபெதிக, திராவிடர் தமிழர் கட்சி, ஆதி தமிழர் பேரவை, தி.வி.க உட்பட பல்வேறு அமைப்பினர் காவல் நிலைய சித்திரவதைகளுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...