கோவையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஆட்கள் வீட்டினுள் அமர்ந்து கொண்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்!

கோவை: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெற்ற கடன்களுக்கு உடனே திருப்பி செலுத்த வலியுறுத்தி ஆட்கள் வீட்டினுள் அமர்ந்து மிரட்டுவதாக மகளிர் சுய உதவி குழு பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவை: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெற்ற கடன்களுக்கு உடனே திருப்பி செலுத்த வலியுறுத்தி ஆட்கள் வீட்டினுள் அமர்ந்து மிரட்டுவதாக மகளிர் சுய உதவி குழு பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.



இது குறித்து ராமநாதபுரம் பனிமலர் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் ஜோதிமணி கூறுகையில், மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டிற்கு வந்து உள்ளே அமர்ந்து கொண்டு கடனாக வாங்கிய தொகையை உடனடியாக செலுத்தினால் மட்டுமே வீட்டில் இருந்து வெளியேறுவோம் எனவும் ஆபாச வார்த்தைகளால் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் பொது போக்குவரத்து இல்லாமல் பலர் பணிக்கு செல்ல முடியாத சூழலில், உள்ளதாகவும் பெரும்பாலானோர் டிபன் கடை, மில் தொழிலாளர், ஓட்டுனர் என உள்ளதாக கூறினார்.

மேலும், தங்கள் பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அடைக்கப்பட்டு உள்ளதாகவும் வெளியே செல்ல முடியாத சூழலில் உள்ளதாகவும் தெரிவித்த அவர், பணத்தை வட்டியுடன் செலுத்த தயாராக உள்ளதாகவும் கொரோனா தொற்று குறையும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...