கோவை அன்னூர் அருகே சமூக வலைதளங்களில் பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்ட பா.ஜ.க உறுப்பினர் கைது!

கோவை: சமூக வலைதளங்களில் பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்ட பா.ஜ.க உறுப்பினர் நந்தகுமாரை அன்னூர் அருகே போலீசார் கைது செய்தனர்.


கோவை: சமூக வலைதளங்களில் பெரியாரை இழிவுபடுத்திய பா.ஜ.க உறுப்பினர் நந்தகுமாரை அன்னூர் அருகே கணேசபுரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூரில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மற்றும் கந்தசஷ்டி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரின் பேரில், பதிவிட்ட இளைஞர் சண்முகநாதன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதேபோல, பாஜகவைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர், பெரியார் குறித்து அவதூறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கூறி நந்தகுமாரை கைது செய்யக் கோரி அன்னூர் காவல்நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதில் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு மட்டும் செய்யப்பட்டு, கைது செய்யப்படாததை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் குடும்பத்துடன் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் பெரியாரை இழிவுபடுத்திய பா.ஜ.க உறுப்பினர் நந்தகுமார் மீது வழக்குப் பதிவு செய்திருந்த அன்னூர் போலீசார் கடந்த ஒருவார காலமாக அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த நந்தகுமாரை நேற்று அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வைத்து காவல்துறை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் நந்தகுமாரை ஆஜர்படுத்திய போலீசார்​, அவரை பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...