கோவை சிட்கோ பகுதியில் மனைவியிடம் தகாத உறவு கொண்டிருந்தவரை பூரி கட்டையால் தாக்கி கொலை செய்த கணவன்

கோவை: கோவை சிட்கோ நாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவரது வீட்டின் அருகில் திருநெல்வேலி திசையன்விளை பகுதியை சேர்ந்த இசக்கிலிங்கம் (21) என்பவர் வசித்து வருகிறார்.

கோவை: கோவை சிட்கோ நாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவரது வீட்டின் அருகில் திருநெல்வேலி திசையன்விளை பகுதியை சேர்ந்த இசக்கிலிங்கம் (21) என்பவர் வசித்து வருகிறார்.

இவர் முத்து விலாஸ் என்ற பலகார கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன் அபுபக்கர் சித்திக்கின் மனைவியும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இசக்கிலிங்கத்திற்கும், அபுபக்கரின் மனைவிக்கும் இடையே முறையற்ற உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக பல முறை எச்சரித்தும் இருவரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 30 ம் தேதி மாலை அபுபக்கர் சித்திக் வீட்டிற்கு வந்த போது வீட்டில் இசக்கிலிங்கம் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த, அபூபக்கர் வீட்டில் இருந்த பூரிகட்டையால் இசக்கிலிங்கத்தை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த இசக்கிலிங்கம், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இசக்கிலிங்கம் உயிரிழந்தார்.

பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இறந்தபோது முதலில் சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது முறையற்ற உறவு காரணமாக கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் அபுபக்கர் சித்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...