கோவை: கோவை ரத்னபுரி சுப்பையா கவுண்டர் வீதியில் வசித்து வருபவர் செந்தில்குமார்(49). இவரது மகள் சுவாதி (17).
கோவை: கோவை ரத்னபுரி சுப்பையா கவுண்டர் வீதியில் வசித்து வருபவர் செந்தில்குமார்(49). இவரது மகள் சுவாதி (17).
இவர் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், மனமுடைந்த நிலையில் மாணவி சுவாதி இருந்துள்ளார்.
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் சுவாதி, தனது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சுவாதியின் பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது, சுவாதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதிப்பெண் குறைவாக பெற்ற காரணத்திற்காக பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இவர் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், மனமுடைந்த நிலையில் மாணவி சுவாதி இருந்துள்ளார்.
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் சுவாதி, தனது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சுவாதியின் பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது, சுவாதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதிப்பெண் குறைவாக பெற்ற காரணத்திற்காக பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.