கோவையின் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் பிரேனேஷ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்

கோவை: கோவை மாவட்டத்தில் நரம்பியல் துறையில் புகழ் பெற்று விளங்கிய மருத்துவர் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தோற்றால் நேற்று இரவு உயிரிழந்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில் நரம்பியல் துறையில் புகழ் பெற்று விளங்கிய மருத்துவர் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தோற்றால் நேற்று இரவு உயிரிழந்தார்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் M.B.பிரேனேஷ் (83). நரம்பியல் மற்றும் மூளை நோய் துறையின் பேராசிரியரான இவர் கோவை அரசு மருத்துவமனை, கேஜி மருத்துவமனை, பிஎஸ்ஜி மருத்துவமனை, உள்ளிட்ட பல மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். 

அதேபோல, சொந்தமாகவும் கோவை ராம் நகர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவரின் துல்லியமான சிகிச்சைக்காக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுள்ளனர். 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வயது மூப்பினால் உடல்நிலை பாதிக்கப்பட்டட மருத்துவர் பிரனேஷ் பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகளையடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அவர் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். 

மருத்துவர் பிரேனேஷ் அவரது இறப்பிற்கு சக மருத்துவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும், நோயாளிகளை அன்புடன் நடத்துவதில் மருத்துவர் பிரனேஷ் ஒரு முன் உதாரணமாக இருந்துள்ளார் எனவும் மருத்துவர்கள் புகழாரம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...