கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் தங்கள் குடும்பங்களுடன் சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர்.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் தங்கள் குடும்பங்களுடன் சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, பிறை தெரிவதை வைத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்தை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் தங்களது வீடுகளிலேயே இன்று சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.
கோவையை பொறுத்தவரையில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் உக்கடம், போத்தனூர், சுந்தராபுரம், கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர், சாய்பாபா காலனி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அவரவர் வீடுகளில் இன்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கோவையில் இஸ்லாமிய மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, பிறை தெரிவதை வைத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்தை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் தங்களது வீடுகளிலேயே இன்று சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.
கோவையை பொறுத்தவரையில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் உக்கடம், போத்தனூர், சுந்தராபுரம், கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர், சாய்பாபா காலனி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அவரவர் வீடுகளில் இன்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கோவையில் இஸ்லாமிய மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.