கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை 3016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை 3016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவைகள் நிபந்தனைகளுடன் இயங்கி வருகின்றன.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் போன்றவற்றில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, கோவையில் கொரோனா பாதிப்பு நான்கு ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 29ம் தேதி நிலவரப்படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மட்டும் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 2084 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவைகள் நிபந்தனைகளுடன் இயங்கி வருகின்றன.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் போன்றவற்றில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, கோவையில் கொரோனா பாதிப்பு நான்கு ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 29ம் தேதி நிலவரப்படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மட்டும் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 2084 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவித்தார்.