கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் ஆறு மாத காலம் மரக் கூண்டில் இருந்து வெளியே வந்த அரிசி ராஜாவிற்கு சிறப்பு பூஜை செய்து வனத்துறையினர் வரவேற்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் ஆறு மாத காலம் மரக் கூண்டில் இருந்து வெளியே வந்த அரிசி ராஜாவிற்கு சிறப்பு பூஜை செய்து வனத்துறையினர் வரவேற்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆழியார் நவமலை பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் மலைவாழ் மக்கள் இருவர் மற்றும் விவசாயி ஒருவர் உயிரிழந்தனர்.
மேலும், மலை அடிவார பகுதியில் தென்னை தோப்பு விவசாய நிலங்களை அழித்து பொது மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் விவசாயிகள் நாலுமுக்கு சுங்கம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வனத்துறையினர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி கலீமை வரவழைத்து அர்த்தநாரி பாளையத்தில் கடந்த 14-11-2019ல் பிடிக்கப்பட்ட அரிசி ராஜா அதே நாளில் டாப்சிலிப் வரகளியாறு மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.
கடந்த ஆறு மாதம் காலத்திற்கு பிறகு அரிசி யானை, பாகன்கள் கட்டளைக்கு அடிபணிந்து உணவு உட்கொள்ளுதல், பாகன்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஜூலை 21ம் வெளியே கொண்டுவரப்பட்டது.

மேலும், மர கூண்டில் இருந்து வெளியே வந்த அரிசி ராஜாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. வனத்துறையினர் மற்றும் பாகன்கள் அரிசி ராஜாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் சேவியர் ஆரோக்கிராஜ் கூறுகையில், அரிசி ராஜாவிற்கு வனத்துறை சார்பில் முத்து என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நல்ல ஆரோக்கிய நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.
மேலும், முத்துவுக்கு பாகன்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து உள்ளதாகவும் வரும் 12ம் தேதி யானைகள் தின விழாவில் சின்னதம்பியுடன் அரிசி ராஜா (எ) முத்துவும் பங்கேற்பான் என தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆழியார் நவமலை பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் மலைவாழ் மக்கள் இருவர் மற்றும் விவசாயி ஒருவர் உயிரிழந்தனர்.
மேலும், மலை அடிவார பகுதியில் தென்னை தோப்பு விவசாய நிலங்களை அழித்து பொது மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் விவசாயிகள் நாலுமுக்கு சுங்கம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வனத்துறையினர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி கலீமை வரவழைத்து அர்த்தநாரி பாளையத்தில் கடந்த 14-11-2019ல் பிடிக்கப்பட்ட அரிசி ராஜா அதே நாளில் டாப்சிலிப் வரகளியாறு மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.
கடந்த ஆறு மாதம் காலத்திற்கு பிறகு அரிசி யானை, பாகன்கள் கட்டளைக்கு அடிபணிந்து உணவு உட்கொள்ளுதல், பாகன்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஜூலை 21ம் வெளியே கொண்டுவரப்பட்டது.
மேலும், மர கூண்டில் இருந்து வெளியே வந்த அரிசி ராஜாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. வனத்துறையினர் மற்றும் பாகன்கள் அரிசி ராஜாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் சேவியர் ஆரோக்கிராஜ் கூறுகையில், அரிசி ராஜாவிற்கு வனத்துறை சார்பில் முத்து என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நல்ல ஆரோக்கிய நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.
மேலும், முத்துவுக்கு பாகன்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து உள்ளதாகவும் வரும் 12ம் தேதி யானைகள் தின விழாவில் சின்னதம்பியுடன் அரிசி ராஜா (எ) முத்துவும் பங்கேற்பான் என தெரிவித்தார்.