பிளஸ் 1 தேர்வு: கோவை மாநகராட்சிப் பள்ளிகள் 97.17 சதவீதம் தேர்ச்சி; கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 3.67 சதவீதம் உயர்வு

கோவை: கோவை மாநகராட்சிப் பள்ளிகள் பிளஸ் 1 தேர்வில் 97.17 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இது கடந்தாண்டை விட 3.67 சதவீதம் அதிகம்.

கோவை: கோவை மாநகராட்சிப் பள்ளிகள் பிளஸ் 1 தேர்வில் 97.17 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இது கடந்தாண்டை விட 3.67 சதவீதம் அதிகம்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 4 தேதி முதல் 26ம் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்றது. கோவை மாநகராட்சியில் 16 பள்ளிகளில் இருந்து 592 மாணவர்கள், 1,212 மாணவியர்கள் என மொத்தம் 1,804 பேர் தேர்வு எழுதினர்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 562 மாணவர்கள், 1,191 மாணவியர்கள் என 1,753 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 94.93 சதவீதம் ஆகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.27 சதவீதம் என மொத்த தேர்ச்சி விகிதம் 97.17 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.22 சதவீதம், ரத்தினகிரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.77 சதவீதம், எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.68 சதவீதம், உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.28 சதவீதம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மேற்கு, 97.87 சதவீதம், ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.75 சதவீதம், பா.கமலநாதன் நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 97.10 சதவீதம், சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 96.59 சதவீதம், பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 96.25 சதவீதம், ராமநாதபுரம் மாநரகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 95.96 சதவீதம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 95.79 சதவீதம், வடகோவை மாநகராட்சி மேல்நிலலைப்பள்ளி 95.52 சதவீதம், மாநகராட்சி நகர மேல்நிலைப்பள்ளி 95.06 சதவீதம், செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 92.52 சதவீதம், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலலைப்பள்ளி 88.68 சதவீதம்.

கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 3.67 சதவீதம் அதிகரித்துள்ளதால் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...