புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பொள்ளாச்சியில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை: பொள்ளாச்சியில் மதிமுக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன் தலைமையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மதிமுக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன் தலைமையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களின் பேட்டியின் போது, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் நீட் தேர்வை அமல்படுத்தி கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தது போல் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்ற நிலை உருவாகும், தேர்வுகளுக்கு கோச்சிங் சென்டர் என்ற நிலையில் படிப்பை தொடர முடியாத நிலை உருவாகும்.

அதேபோல, மாணவர்கள் 3 , 5, 8, வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பதால் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் எனவும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக முதலமைச்சர் இதுவரை எந்த வித கருத்து செல்லாததை வண்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

மேலும், மாநில அதிகாரத்தை பறித்து மத்திய அரசில் குவிக்கும் இந்த கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் மும்மொழி கொள்கை மாணவர்களிடம் பணிச்சுமையைத்தான் அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் செயல் என்றும் தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கை திரும்பப் பெறவில்லை என்றால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை திரட்டி பெரும் அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...