ஈரோடு: சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் ஒரு ஜோடி யானை தந்தங்களை கடத்தி வந்த இருவரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் ஒரு ஜோடி யானை தந்தங்களை கடத்தி வந்த இருவரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தூ.நா பாளையம் வனச்சரக எல்லையில் யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவலின் அடிப்படையில் ஒருவார காலமாக சக்தி-அத்தாணி சாலையில் ரோந்து பணி மற்றும் வாகன பரிசோதனையும் நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று இரவு பணியில் ஈடுபட்டு இருந்த தனிக்குழுவினர், சுமார் 10 மணியளவில் இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் ஒரு ஜோடி யானை தந்தங்கள் கடத்தி வருவதை கண்டுபிடித்தனர். விசாரணையில் மேலும் இருவருக்கும் பங்கு உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த தந்தங்கள் அந்தியூர் அருகே இறந்து கிடந்த யானையில் இருந்து எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு யானை இறந்த செய்தி கூட வெளியாகாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதேபோல, சில நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து விற்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தூ.நா பாளையம் வனச்சரக எல்லையில் யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவலின் அடிப்படையில் ஒருவார காலமாக சக்தி-அத்தாணி சாலையில் ரோந்து பணி மற்றும் வாகன பரிசோதனையும் நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று இரவு பணியில் ஈடுபட்டு இருந்த தனிக்குழுவினர், சுமார் 10 மணியளவில் இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் ஒரு ஜோடி யானை தந்தங்கள் கடத்தி வருவதை கண்டுபிடித்தனர். விசாரணையில் மேலும் இருவருக்கும் பங்கு உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த தந்தங்கள் அந்தியூர் அருகே இறந்து கிடந்த யானையில் இருந்து எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு யானை இறந்த செய்தி கூட வெளியாகாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதேபோல, சில நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து விற்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.