தமிழக அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசு..! நேரடியாக எங்களை சந்திக்கலாம் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: தமிழக அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசு எனவும் நேரடியாக எங்களை சந்திக்கலாம் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


திருப்பூர்: தமிழக அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசு எனவும் நேரடியாக எங்களை சந்திக்கலாம் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் ஆவின் தொகுப்பு பால் குளிரகத்தை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பால்வள ஒன்றியம் திருப்பூர் மாவட்டத்திற்கு தனியாக துவக்கப்பட்டு 2.60 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குளிரூட்டும் மையங்கள் துவக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு முதல் சேர்க்கை துவங்குகிறது. ரூ.250 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு காவிரி நீர் கொண்டு வரப்படுகிறது. பால் உற்பத்தியில் திருப்பூர் முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார் அவர், கூடுதல் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறினார்.

அதேபோல, மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் தொடர்பான கேள்விக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து கேட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்த அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசு, நேரடியாக எங்களை சந்திக்கலாம் என தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் பெருந்துறை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.விஜயகார்த்திகேயன், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...