கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு உயிருக்காக போராடும் யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு உயிருக்காக போராடும் யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஊரடங்கு காலம் என்பதால் கோவை வனக்கோட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் இருக்கும் யானைகளை கண்காணிக்கும் பணியினை தீவிரப்படுத்துமாறு மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று அதிகாலை நெல்லிமலை காப்புக்காட்டில் யானை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த வனத்துறை அதிகாரிகள் ஒரு ஆண் யானை நகர்வதற்கு சிரமப்படுவதைப் பார்த்துள்ளனர்.
இதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பகல் நேரத்தில் யானையை கண்டுபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், யானைகள் கூட்டமாக சுற்றுவதால் நோய்வாய்ப்பட்ட யானையை கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.
இந்த நிலையில், இன்றும் பணியாளர்கள் தேடிய நிலையில், நெல்லிமலை காப்புக்காட்டின் எல்லையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் வனத்திற்குள் யானை ஒன்று உடல் நலக்குறைவால் தரையில் படுத்து உயிருக்கு சிரமப்படுவதைப் பார்த்த அதிகாரிகள் தேக்கப்பட்டியை சேர்ந்த வன கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

வாயில் காயம் பட்டு இருப்பதால், உணவு எடுத்துக் கொள்ளாமல் கீழே விழுந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமீப நாட்களாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இப்பொழுது ஆண் யானை உடல் நலம் குன்றி இருப்பது சந்தேகம் அளிப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஊரடங்கு காலம் என்பதால் கோவை வனக்கோட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் இருக்கும் யானைகளை கண்காணிக்கும் பணியினை தீவிரப்படுத்துமாறு மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று அதிகாலை நெல்லிமலை காப்புக்காட்டில் யானை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த வனத்துறை அதிகாரிகள் ஒரு ஆண் யானை நகர்வதற்கு சிரமப்படுவதைப் பார்த்துள்ளனர்.
இதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பகல் நேரத்தில் யானையை கண்டுபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், யானைகள் கூட்டமாக சுற்றுவதால் நோய்வாய்ப்பட்ட யானையை கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.
இந்த நிலையில், இன்றும் பணியாளர்கள் தேடிய நிலையில், நெல்லிமலை காப்புக்காட்டின் எல்லையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் வனத்திற்குள் யானை ஒன்று உடல் நலக்குறைவால் தரையில் படுத்து உயிருக்கு சிரமப்படுவதைப் பார்த்த அதிகாரிகள் தேக்கப்பட்டியை சேர்ந்த வன கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
வாயில் காயம் பட்டு இருப்பதால், உணவு எடுத்துக் கொள்ளாமல் கீழே விழுந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமீப நாட்களாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இப்பொழுது ஆண் யானை உடல் நலம் குன்றி இருப்பது சந்தேகம் அளிப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்