சென்னை: மருத்துவ ஊழியர்களை அவதூறாக பேசிய மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை: மருத்துவ ஊழியர்களை அவதூறாக பேசிய மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை எதிர்த்து அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றி பல அவதூறுகளை நேற்றை தினம் வெளியிட்டுள்ள வீடியோவில் மாரிதாஸ் பேசியுள்ளார்.
இந்நிலையில், அரசு மருத்துவர்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைக்கு யு டியூப் வாயிலாக மாரிதாஸ் என்பவர் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை மோசமான முறையில் மற்றும் தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்துள்ளார்.
இம்மாதிரியான பேச்சுக்களை புறம் தள்ளி மக்கள் நலம் காக்க எங்கள் பணி தொடர்ந்தாலும் இத்தவறான பேச்சு அனைவரின் மத்தியில் வருத்தத்தையும் மக்களின் மனதில் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. கோவிட் ஒழிப்பு பணியில் ஓய்வின்றி பணியாற்றும் 18,000 மருத்துவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சார்பாக அரசு டாக்டர்கள் சங்கம் அவரின் பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் சுய விளம்பரத்திற்காக இவ்வாறு அவதூறாகத் தவறாகப் பேசிய மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை எதிர்த்து அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றி பல அவதூறுகளை நேற்றை தினம் வெளியிட்டுள்ள வீடியோவில் மாரிதாஸ் பேசியுள்ளார்.
இந்நிலையில், அரசு மருத்துவர்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைக்கு யு டியூப் வாயிலாக மாரிதாஸ் என்பவர் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை மோசமான முறையில் மற்றும் தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்துள்ளார்.
இம்மாதிரியான பேச்சுக்களை புறம் தள்ளி மக்கள் நலம் காக்க எங்கள் பணி தொடர்ந்தாலும் இத்தவறான பேச்சு அனைவரின் மத்தியில் வருத்தத்தையும் மக்களின் மனதில் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. கோவிட் ஒழிப்பு பணியில் ஓய்வின்றி பணியாற்றும் 18,000 மருத்துவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சார்பாக அரசு டாக்டர்கள் சங்கம் அவரின் பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் சுய விளம்பரத்திற்காக இவ்வாறு அவதூறாகத் தவறாகப் பேசிய மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.