கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரத்தம் சொட்ட சொட்ட வாலிபர் ஒருவர் புகார் அளிக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரத்தம் சொட்ட சொட்ட வாலிபர் ஒருவர் புகார் அளிக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது மனைவி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, கொரோனா காலம் என்பதால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சாலை ஓரத்திலேயே படுத்து உறங்கியும், அம்மா உணவகத்தில் உணவு உட்கொண்டும் வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று கோவை வாலாங்குளத்தில் மீன் பிடித்து விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்தவர், மீன் பிடித்து கொண்டிருக்கையில் அங்கிருந்த சிலர் மீன் பிடிக்கக் கூடாது என கூறி இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ராஜரத்தினத்தை மற்றவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டும், கை கால்களில் ரத்தம் வழிய வழிய அதே நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.
அப்போது, ரத்தம் சொட்ட சொட்ட ஆணையர் அலுவலகம் வந்த நபரை கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போலீஸ் வாகனத்தில் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து தனக்கு நீதி வேண்டும் எனவும் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்து தருமாறு கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது மனைவி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, கொரோனா காலம் என்பதால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சாலை ஓரத்திலேயே படுத்து உறங்கியும், அம்மா உணவகத்தில் உணவு உட்கொண்டும் வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று கோவை வாலாங்குளத்தில் மீன் பிடித்து விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்தவர், மீன் பிடித்து கொண்டிருக்கையில் அங்கிருந்த சிலர் மீன் பிடிக்கக் கூடாது என கூறி இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ராஜரத்தினத்தை மற்றவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டும், கை கால்களில் ரத்தம் வழிய வழிய அதே நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.
அப்போது, ரத்தம் சொட்ட சொட்ட ஆணையர் அலுவலகம் வந்த நபரை கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போலீஸ் வாகனத்தில் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து தனக்கு நீதி வேண்டும் எனவும் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்து தருமாறு கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.