சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆக.31 வரை ஊரடங்கை நீட்டித்து புது விதிமுறைகளை நேற்று மத்திய அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதத்தில். கடைபிடிக்கப்படும் புதிய ஊரடங்கு உத்தரவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆக.31 வரை ஊரடங்கை நீட்டித்து புது விதிமுறைகளை நேற்று மத்திய அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதத்தில். கடைபிடிக்கப்படும் புதிய ஊரடங்கு உத்தரவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
அதில், ஜூலை மாதம் போல், ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை தொடரும் எனவும் அதில் தளர்வு ஏதும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், இணைய வழிக் கல்வி கற்றலை தொடர்வதுடன் அதனை ஊக்குவிக்கலாம்.
சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர 75% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி என அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும், 144 தடை உத்தரவு தொடரும், 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற விதி அமலில் தொடர்ந்து இருக்கும்.
காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி.
டீக்கடை, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை, 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி. மேலும், உணவகங்களில் இரவு 9 மணி வரையிலும் பார்சல் வழங்க அனுமதி.
ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலையே தொடரும். பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி.
ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்.