கோவை: கோவையில் 60 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட எம்.எல்.எம் நிறுவனர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் ஐந்து பேரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் 60 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட எம்.எல்.எம் நிறுவனர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் ஐந்து பேரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை பங்கஜா மில்ஸ் பகுதி அருகில் உள்ள கிருஷ்ணசாமி நகர் பகுதியில் கிரீன் கிரஸ்ட் இன்வஸ்ட்மெண்ட் என்ற எம்.எல்.எம் கம்பெனி இயங்கி வருகிறது. இதற்கு முன் இந்த நிறுவனம் திருச்சி சாலை அரசு மருத்துவமனை எதிரில் சித்தி விநாயகா டிரேடிங் என்ற பெயரில் இயங்கி வந்துள்ளது.
இந்நிலையில், இதன் உரிமையாளர்களான மணிகண்டன் மற்றும் அவரது மகன் சஞ்சய் குமார் ஆகியோர் தங்களது நிறுவன ஆட்கள் மூலம் பணம் முதலீடு செய்தால் நூற்றுக்கு 0.5% வட்டி தருவதாக கூறியதை நம்பி ஏராளமானோர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளனர்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், பிரபல நடிகைகள் ஆகியோருடன் இருந்த புகைப்படங்களை காண்பித்து விளம்பரங்கள் செய்து உள்ளனர்.

அவர், சச்சின் டெண்டுல்கருடன் எடுக்கப்பட்ட புகைபபடங்கள் போலியாக இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்
தினமும் 0.5 சதவீதம் தருவதாக கூறியவர், முதலில் அதனை வாடிக்கையாளர் வங்கி கணக்கில் வரவு வைத்ததாகவும், கடந்த மே மாதம் முதல் பணம் வராத காரணத்தால் முதலீட்டாளர்கள் கேட்டபோது, காலம் தாழ்த்தியதுடன் பணம் செலுத்தியவர்களை அடியாட்கள் கொண்டு மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, இன்று காலை எம்.எல்.எம் உரிமையாளர் இல்லத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரும் தமிழகம் முழுவதும் 8000 மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, முதலீடு செய்தவர்கள் பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மணிகண்டன் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோரை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 60 கோடி ரூபாய் வரை இவர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, இவர்கள் மீது 120b,406, 420 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த நிறுவனத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா, சீனிவாசன், கார்த்திகேயன் மற்றும் பங்குதாரர்களாக உள்ளவர்களையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என தகவல் வெளியாகியுள்ளது.
கோவை பங்கஜா மில்ஸ் பகுதி அருகில் உள்ள கிருஷ்ணசாமி நகர் பகுதியில் கிரீன் கிரஸ்ட் இன்வஸ்ட்மெண்ட் என்ற எம்.எல்.எம் கம்பெனி இயங்கி வருகிறது. இதற்கு முன் இந்த நிறுவனம் திருச்சி சாலை அரசு மருத்துவமனை எதிரில் சித்தி விநாயகா டிரேடிங் என்ற பெயரில் இயங்கி வந்துள்ளது.
இந்நிலையில், இதன் உரிமையாளர்களான மணிகண்டன் மற்றும் அவரது மகன் சஞ்சய் குமார் ஆகியோர் தங்களது நிறுவன ஆட்கள் மூலம் பணம் முதலீடு செய்தால் நூற்றுக்கு 0.5% வட்டி தருவதாக கூறியதை நம்பி ஏராளமானோர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளனர்.
மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், பிரபல நடிகைகள் ஆகியோருடன் இருந்த புகைப்படங்களை காண்பித்து விளம்பரங்கள் செய்து உள்ளனர்.
அவர், சச்சின் டெண்டுல்கருடன் எடுக்கப்பட்ட புகைபபடங்கள் போலியாக இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்
தினமும் 0.5 சதவீதம் தருவதாக கூறியவர், முதலில் அதனை வாடிக்கையாளர் வங்கி கணக்கில் வரவு வைத்ததாகவும், கடந்த மே மாதம் முதல் பணம் வராத காரணத்தால் முதலீட்டாளர்கள் கேட்டபோது, காலம் தாழ்த்தியதுடன் பணம் செலுத்தியவர்களை அடியாட்கள் கொண்டு மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, இன்று காலை எம்.எல்.எம் உரிமையாளர் இல்லத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரும் தமிழகம் முழுவதும் 8000 மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, முதலீடு செய்தவர்கள் பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மணிகண்டன் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோரை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 60 கோடி ரூபாய் வரை இவர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, இவர்கள் மீது 120b,406, 420 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த நிறுவனத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா, சீனிவாசன், கார்த்திகேயன் மற்றும் பங்குதாரர்களாக உள்ளவர்களையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என தகவல் வெளியாகியுள்ளது.