திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்தம் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி, மாநகராட்சி வளாகத்தில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்தம் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி, மாநகராட்சி வளாகத்தில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக இன்று ஒப்பந்தம் விடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு உள்ளன.
நேற்று மாலை 5 மணி அளவில் ஒப்பந்த புள்ளி பெறப்பட்ட பெட்டி திறக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் அதற்காக காத்திருந்த வேலுச்சாமி என்பவர் ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்த, அனைவர் முன்னிலையிலும் ஒப்பந்த பெட்டியை திறக்காமல் அதிகாரி தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்குவதாக குற்றம் சாட்டினா்.
இதனால், மாநகராட்சி வளாகத்தில் அவர் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டவரை அழைத்துச் சென்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக இன்று ஒப்பந்தம் விடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு உள்ளன.
நேற்று மாலை 5 மணி அளவில் ஒப்பந்த புள்ளி பெறப்பட்ட பெட்டி திறக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் அதற்காக காத்திருந்த வேலுச்சாமி என்பவர் ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்த, அனைவர் முன்னிலையிலும் ஒப்பந்த பெட்டியை திறக்காமல் அதிகாரி தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்குவதாக குற்றம் சாட்டினா்.
இதனால், மாநகராட்சி வளாகத்தில் அவர் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டவரை அழைத்துச் சென்றனர்.