கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய வழக்கு: பாரத் சேனா நிர்வாகி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

கோவை: கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத் சேனா நிர்வாகி மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத் சேனா நிர்வாகி மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. 

கடந்த வாரம் கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதை தொடர்ந்து, தகவலறிந்து வந்த பெரியார் ஆதரவாளர்கள் காவி சாயம் பூசிய நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடத்தினர்.

மேலும், குற்றவாளியை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், போத்தனூர் அண்ணாநகரை சேர்ந்த பாரத் சேனா பொறுப்பாளர் அருண்கிருஷ்ணன் (21) என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர், அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மாநகர காவல் ஆணையாளர், அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான உத்தரவு நகலை நேற்று மாலை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் மாநகர காவல் துறை வழங்கியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...