கோவை: பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் அனைவரும் மசூதிகளிலோ, தனிப்பட்ட இடங்களிலோ நடத்தப்படும் கூட்டு பிரார்த்தனைகளை தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை: பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் அனைவரும் மசூதிகளிலோ, தனிப்பட்ட இடங்களிலோ நடத்தப்படும் கூட்டு பிரார்த்தனைகளை தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் ஜூலை 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் தலைமையில் இஸ்லாமிய அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பக்ரீத் விழாவின் போது அனைவரும் முக கவசம், கையுறைகள் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி தெரிவித்தார்.
அதேபோல, மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இறைச்சி வெட்ட வேண்டும். அனுமதியற்ற இடங்களில் வெட்டக்கூடாது. முக்கியமாக இறைச்சிக்காக கன்றுக் குட்டிகளை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநகராட்சியால் வழங்கப்படும் விழா சம்பந்தமான அறிவுரைகளையும், விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
மேலும், பக்ரீத் பண்டிகையின் போது அதிகமாக வெளியே போவதையும், வருவதையும் கூட்டமாக கூடி இருப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்பினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் அறிவுறுத்தினார்.
தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் ஜூலை 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் தலைமையில் இஸ்லாமிய அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பக்ரீத் விழாவின் போது அனைவரும் முக கவசம், கையுறைகள் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி தெரிவித்தார்.
அதேபோல, மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இறைச்சி வெட்ட வேண்டும். அனுமதியற்ற இடங்களில் வெட்டக்கூடாது. முக்கியமாக இறைச்சிக்காக கன்றுக் குட்டிகளை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநகராட்சியால் வழங்கப்படும் விழா சம்பந்தமான அறிவுரைகளையும், விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
மேலும், பக்ரீத் பண்டிகையின் போது அதிகமாக வெளியே போவதையும், வருவதையும் கூட்டமாக கூடி இருப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்பினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் அறிவுறுத்தினார்.