கோவையில் பக்ரீத் விழாவின் போது அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் - மாநகராட்சி துணை ஆணையர்

கோவை: பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் அனைவரும் மசூதிகளிலோ, தனிப்பட்ட இடங்களிலோ நடத்தப்படும் கூட்டு பிரார்த்தனைகளை தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையாளர்‌ அறிவுறுத்தியுள்ளார்.

கோவை: பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் அனைவரும் மசூதிகளிலோ, தனிப்பட்ட இடங்களிலோ நடத்தப்படும் கூட்டு பிரார்த்தனைகளை தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையாளர்‌ அறிவுறுத்தியுள்ளார்.



தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் ஜூலை 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கோவை மாநகராட்சி துணை ஆணையாளர்‌ தலைமையில் இஸ்லாமிய அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பக்ரீத் விழாவின் போது அனைவரும் முக கவசம், கையுறைகள் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி தெரிவித்தார்.

அதேபோல, மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இறைச்சி வெட்ட வேண்டும். அனுமதியற்ற இடங்களில் வெட்டக்கூடாது. முக்கியமாக இறைச்சிக்காக கன்றுக் குட்டிகளை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநகராட்சியால் வழங்கப்படும் விழா சம்பந்தமான அறிவுரைகளையும், விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

மேலும், பக்ரீத் பண்டிகையின் போது அதிகமாக வெளியே போவதையும், வருவதையும் கூட்டமாக கூடி இருப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்பினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...