கோவை: பொள்ளாச்சியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட மூன்று நகராட்சி ஊழியர்கள் சுகாதாரத்துறையினர் வருவதற்குள் பொது இடங்களில் சுற்றித்திரிந்ததால் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை: பொள்ளாச்சியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட மூன்று நகராட்சி ஊழியர்கள் சுகாதாரத்துறையினர் வருவதற்குள் பொது இடங்களில் சுற்றித்திரிந்ததால் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி அலுவலக ஆணையர் உட்பட 12 பேர் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு 5 நாட்கள் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மற்ற நகராட்சி அலுவலர்கள் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 3 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், சுகாதாரத் துறையினர் அவர்களை அழைத்துச் செல்வதற்கு முன்பாகவே பொது இடங்களில் நடந்து வந்துள்ளனர். அதிக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான பேருந்து நிலையம், உடுமலை சாலை வழியாக நடந்து அரசு மருத்துவமனையின் வளாகத்திற்குள் வந்தனர். இவர்கள் வருவதை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இதையடுத்து, பொள்ளாச்சியின் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி 3 நகராட்சி ஊழியர்கள் மீது தானாக முன்வந்து தனிமை படுத்ததிலிருந்து வெளியேறி நோய் பரப்பும் நோக்கத்திற்காக வந்ததாக புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி அலுவலக ஆணையர் உட்பட 12 பேர் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு 5 நாட்கள் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மற்ற நகராட்சி அலுவலர்கள் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 3 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், சுகாதாரத் துறையினர் அவர்களை அழைத்துச் செல்வதற்கு முன்பாகவே பொது இடங்களில் நடந்து வந்துள்ளனர். அதிக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான பேருந்து நிலையம், உடுமலை சாலை வழியாக நடந்து அரசு மருத்துவமனையின் வளாகத்திற்குள் வந்தனர். இவர்கள் வருவதை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இதையடுத்து, பொள்ளாச்சியின் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி 3 நகராட்சி ஊழியர்கள் மீது தானாக முன்வந்து தனிமை படுத்ததிலிருந்து வெளியேறி நோய் பரப்பும் நோக்கத்திற்காக வந்ததாக புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.