மகாராஷ்டிராவில் இருந்து போலி இபாஸ் மூலம் கோவை வந்த சொகுசு பேருந்து சிறைபிடிப்பு - போலீசார் விசாரணை

கோவை: மகாராஷ்டிராவில் இருந்து போலி இபாஸ் மூலம் கோவைக்கு வந்த சொகுசு பேருந்தை சிறைபிடித்த போலீசார், மதுரைக்கு இபாஸ் வாங்கிக்கொண்டு கோவையில் இறங்கிய பயணிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: மகாராஷ்டிராவில் இருந்து போலி இபாஸ் மூலம் கோவைக்கு வந்த சொகுசு பேருந்தை சிறைபிடித்த போலீசார், மதுரைக்கு இபாஸ் வாங்கிக்கொண்டு கோவையில் இறங்கிய பயணிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாநில, மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இரவு, பகலாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை மஹாராஷ்டிரவில் இருந்து 25 பயணிகளுடன் நுழைந்த தனியார் பேருந்தை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பேருந்தின் இ-பாஸை வாங்கி சோதனை செய்த போது, மகாராஷ்டிரா முதல் மதுரை வரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



ஆனால், இங்குள்ள மாவட்ட நிர்வாகத்திடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள படாமல் பயணிகளை நிலம்பூர் பகுதியில் இறக்கி விட்டுள்ளனர். பல மாநிலங்களை கடந்து இந்த சொகுசுப்பேருந்து எப்படி கோவை வந்தது எனவும் போலி இ-பாஸ் பெற்றது எப்படி ? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இபாஸ் கிடைக்காத மாவட்டங்களை தவிர்த்து பக்கத்து மாவட்டங்களுக்கு அனுமதி வாங்கி கொண்டு பயணிகள் வரக்கூடிய இடத்திற்கு இறக்கிவிடப்பட்டு வருவதாக சொகுசு பேருந்துகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...