கோவை சூலூர் அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை - இருவர் கைது..!

கோவை: கோவை சூலூர் அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சூலூர் அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாசாணம் (33). இவரும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரும் நண்பர்கள். கடந்த 15 நாட்களுக்கு முன் சக்திவேல் மாசாணத்திடம் இருந்த 3500 ரூபாய் பணம் மற்றும் இரண்டு மதுபாட்டில்களை எடுத்து சென்றுள்ளார். இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சூலூர் அசோசியேசன் பெட்ரோல் பங்க் அருகில் சக்திவேல் தனது மனைவியுடன் இருந்த போது தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் தனது நண்பரான தட்சணாமூர்த்தியுடன் மாசாணம் வீட்டிற்கு சென்று, இரும்பு கம்பி கொண்டு தலை மற்றும் மார்பு பகுதிகளில் தாக்கியதில் மாசாணம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மாசாணன் வீட்டில் இருந்து வெளியே வராததின் காரணமாக அவரது தந்தை சென்று பார்த்த போது மகன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதையடுத்து, சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த சூலூர் போலீசார் மாசாணனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து மாசாணனை கொலை செய்துவிட்டு தப்பிய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், சக்திவேல் மற்றும் தட்சணாமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக நண்பரை குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...