சென்னை: கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சித்ததாக கைதான கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மற்றும் நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய ஹிந்து பேரவை என்ற அமைப்பை சேர்ந்த கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை: கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சித்ததாக கைதான கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மற்றும் நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய ஹிந்து பேரவை என்ற அமைப்பை சேர்ந்த கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் இருவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில், முருகக் கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமான வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அந்த யூடியூப் சேனலை தடை செய்து, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், சுரேந்திரன் மற்றும் சேந்தில்வாசன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டன.
தற்போது, கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன் மீதும் சென்னை காவல் துறை ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது, என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் இருவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில், முருகக் கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமான வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அந்த யூடியூப் சேனலை தடை செய்து, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், சுரேந்திரன் மற்றும் சேந்தில்வாசன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டன.
தற்போது, கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன் மீதும் சென்னை காவல் துறை ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது, என தகவல் வெளியாகியுள்ளது.