கோவை போத்தனூர் அருகே இளம் பெண் தீயில் கருகி உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

கோவை: கோவை போத்தனூர் அருகே இளம் பெண் தீயில் கருகி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை போத்தனூர் அருகே இளம் பெண் தீயில் கருகி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா (27). இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த சுலோச்சனா மீண்டும் திருநெல்வேலி திரும்பியவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அப்போது, கட்டிட வேலை செய்ய வந்த சதீஷ்(32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து உள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் கோவையில் போத்தனூர் அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியில் ரங்கசாமி கவுண்டர் வீதியில் இன்று குடியேறி உள்ளனர். சுலோச்சனாவின் இரண்டாவது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இன்று புதிய வீட்டிற்கு குடிபுகுந்த நிலையில் சுலோச்சனா தீ விபத்தில் உடல் கருகி பலியானார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார், தீ விபத்து ஏற்பட்டு மரணமடைந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுலோச்சனாவின் உடலை மீட்ட போலீசார் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை குடி பெயர்ந்த இளம் பெண் தீயில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...