கோவை: கோவையில் உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வெரைட்டி ஹால் காவல் நிலையம் மூடப்பட்டது.
கோவை: கோவையில் உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வெரைட்டி ஹால் காவல் நிலையம் மூடப்பட்டது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேபோல, காவல் பணியில் ஈடுபட்டு உள்ள காவலர்களும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதனிடையே, கோவையில் மதுக்கரை, போத்தனூர், துடியலூர் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காவல் நிலையங்கள் மூடப்பட்டு தற்காலிக இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் புகார் அளிக்க வருபவர்களின் புகார்களை பெற காவல் நிலையம் முன்பு டெண்ட் அமைக்கப்பட்டு புகார் மனுக்கள் பெறப்படுகிறது.
இந்நிலையில், கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் பணியாற்றும் 40 வயது மதிக்கத்தக்க உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் காந்திபுரம் காவலர் குடியிருப்பில் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, காவல் நிலையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
மேலும், காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அருகில் அய்யன்ன கவுண்டர் வீதியில் உள்ள மண்டபத்திற்கு காவல் நிலையம் மாற்றப்பட்டுள்ளது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேபோல, காவல் பணியில் ஈடுபட்டு உள்ள காவலர்களும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதனிடையே, கோவையில் மதுக்கரை, போத்தனூர், துடியலூர் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காவல் நிலையங்கள் மூடப்பட்டு தற்காலிக இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் புகார் அளிக்க வருபவர்களின் புகார்களை பெற காவல் நிலையம் முன்பு டெண்ட் அமைக்கப்பட்டு புகார் மனுக்கள் பெறப்படுகிறது.
இந்நிலையில், கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் பணியாற்றும் 40 வயது மதிக்கத்தக்க உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் காந்திபுரம் காவலர் குடியிருப்பில் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, காவல் நிலையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
மேலும், காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அருகில் அய்யன்ன கவுண்டர் வீதியில் உள்ள மண்டபத்திற்கு காவல் நிலையம் மாற்றப்பட்டுள்ளது.