கோவை: தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முககவசம் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்கியது. இத்திட்டத்தில், கோவை மாவட்டத்தில் மட்டும் 10.14 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 முககவசம் விதம் மாவட்டம் முழுவதும் 80 லட்சம் முககவசங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை: தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முககவசம் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்கியது. இத்திட்டத்தில், கோவை மாவட்டத்தில் மட்டும் 10.14 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 முககவசம் விதம் மாவட்டம் முழுவதும் 80 லட்சம் முககவசங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 600 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அரிசி அட்டைகள் 9 லட்சத்து 27 ஆயிரத்து 455 அட்டைகள் உள்ளன. கொரோனா காலத்தில் மக்கள் பயன்பெற பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்ல சமூக இடைவெளி விட்டு நிற்பதற்கு வசதியாக குறியீடும் ரேசன் கடைகள் முன் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முககவசம் வழங்கும் திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு முக கவசங்கள் வந்து சேரவில்லை.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள முககவசங்கள் இன்று இரவுக்குள் வந்துவிடும். நாளை முதல் ரேசன் கடைகளில் முககவசங்கள் வழங்கப்படும். 10 லட்சம் அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 முககவசம் விதம் 80 லட்சம் முககவசங்கள் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட உள்ளது,’’ என்றார்.