கோவை போத்தனூர் சாலை எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. அப்படி, பரபரப்பாக இயங்கும் இந்த சாலையில் பட்டபகலில் இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கோவை: கோவை போத்தனூர் சாலை எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி.பரபரப்பாக இயங்கும் இந்த சாலையில் பட்டபகலில் இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
போத்தனூர் திருமறை நகர் பகுதியை சேர்ந்த சுபையர். இவர்,நேற்று மதியம் 12.28 மணியளவில் தனது இரு சக்கர ஹோண்டா டியோ (Honda Duo) இரு சக்கர வாகனத்தை ஒரு கடையின் முன்புசாவியுடன் நிறுத்தி உள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த நபர் அவரிடம் அட்ரஸ் கேட்டுள்ளார். அவருக்கு பதில் அளித்துவிட்டு சுபையர் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க உள்ளே சென்றுள்ளார்.
பின்பு, கடையில் இருந்து திரும்பிய சுபையர் வந்து பார்த்த போது அவர் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில் இல்லை என்பதால் அதிர்ச்சியடைந்தார்.தொடர்ந்து, போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ள காட்சிகள் சேகரித்தனர். அதில் தோளில் ஒரு பை, கையில் ஒரு பையுடன் ஒரு இளைஞர் இரு சக்கர வாகனம் அருகே நின்று கொண்டு இருப்பதும், கண் இமைக்கும் நேரத்தில் அவர் அந்த வாகனத்தை திருடி செல்வதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட நபரை
போலீசார் தேடி வருகின்றனர்.