கோவையில் பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது

கோவை: கோவை நல்லாம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை பொதுமக்களின் புகாரை அடுத்து துடியலூர் ஆய்வாளர் கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நான்கு லட்சத்து நான்காயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை: கோவை நல்லாம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை பொதுமக்களின் புகாரை அடுத்து துடியலூர் ஆய்வாளர் கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நான்கு லட்சத்து நான்காயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் சமூக இடைவெளியில் இன்றி ஊரடங்கு சமயத்தில் பணம் வைத்து ஒரு கும்பல் சீட்டு விளையாடுவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண் 100க்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அத்தகவல் துடியலூர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி சுந்தரத்திடம் தெரிவிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட துடியலூர் காவல் ஆய்வாளர் நல்லாம்பாளையம் பகுதியில் ஒரு அறையில் சமூக இடைவெளியின்றி பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 13 பேரை குண்டுகட்டாக கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து நான்கு லட்சத்து நான்காயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட 13 பேரும் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

சிறப்பாக செயல்பட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட13 பேரை கைது செய்த துடியலூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து துடியலூர் ஆய்வாளர் கூறும்போது இதுபோன்று தங்கள் பகுதிகளில் நடக்கும் குற்றங்கள் குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணிற்கோ அல்லது துடியலூர் காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களில் விபரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...