கோவை: கருப்பர் கூட்டம் என்ற பெயரில் செயல்பட்ட யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை குறித்து அவதூறு பரப்பியவர்களை கண்டித்து கோவையில் நூதன முறையில் பெண் குழந்தைகள் வேலின் படத்தை வரைந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கோவை: கருப்பர் கூட்டம் என்ற பெயரில் செயல்பட்ட யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை குறித்து அவதூறு பரப்பியவர்களை கண்டித்து கோவையில் நூதன முறையில் பெண் குழந்தைகள் வேலின் படத்தை வரைந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தும், புராணங்களை கேலி செய்தும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தது.
இதன் தொடர்ச்சியாக முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்தும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று அந்த யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அது நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, முருகனை இழிவுபடுத்தியதாக கூறப்படும் அந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன.
இந்தநிலையில் இன்று கருப்பர் கூட்ட யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உக்கடம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் சாலையோர சுவர்களில் முருகனின் அடையாளமான வேலினை வரைந்து நூதன முறையில் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல அக்குழந்தைகள் இனி கந்தசஷ்டிகவசம் குறித்து அவதூறு பரப்பினால் நாங்கள் வீதியில் இறங்கி போராடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.