மேட்டுப்பாளையம்: ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டில் இருந்து நோய் பரவலை தடுத்து வருகிறோம். ஆனால் இந்த வேட்டைக்காரர்களின் பிடியில் இருந்து வனவிலங்குகளை யார் காப்பாற்றுவார்கள் என்று தெரியவில்லை.
மேட்டுப்பாளையம்: ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டில் இருந்து நோய் பரவலை தடுத்து வருகிறோம். ஆனால் இந்த வேட்டைக்காரர்களின் பிடியில் இருந்து வனவிலங்குகளை யார் காப்பாற்றுவார்கள் என்று தெரியவில்லை.
ஊரடங்கு காலம் என்பதால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்காக வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்தில் பாலப்பட்டி வேடர் காலனி பகுதியில் கள்ளத்துப்பாக்கி, சுருக்கு கம்பி வைத்து மான் வேட்டையாடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த வனத்துறை ரோந்து அதிகாரிகள் ஓடந்துறை காப்புக்காட்டில் இருந்து நான்கு பேர், பிரதீப் என்பவரின் தோட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்த வன அதிகாரிகள், உரிமம் பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரித்ததில் வனப்பகுதியில் கறிக்காக மான்களை சுட்டுக் கொன்று எடுத்து செல்வதற்காக முயன்றது தெரிய வந்ததுள்ளது. மான்கள் ஏதும் கிடைக்காததால் வனப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர். உரிமம் பெறாத துப்பாக்கி, சுருக்கு கயிறுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் 40,000 கட்டணம் வசூலிக்கப்பட்டது. சிறுமுகை பகுதியில் யானைகளின் இறப்பும் இவர்களிடையே இருக்கிற நாட்டுத்துப்பாக்கியும் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தீவிர விசாரணை செய்ய வேண்டும் என வனத்துறைக்கு வன ஆர்வலர்கள் கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.