கோவை: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் அவரது குடும்ப விபரங்களை பத்திரிக்கையில் வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் அவரது குடும்ப விபரங்களை பத்திரிக்கையில் வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 13.07.2020 அன்று பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் “செய்தி சாரல்” என்ற தினசரி நாளிதழில் 15.07.2020 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நெகமம் காவல் நிலையத்தில் 18.07.2020 அன்று புகார் அளித்தார், அந்த புகாரை மகிளா நீதிமன்றதிற்கு அனுப்பி அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட பத்திரிக்கை ஆசிரியரின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து 22.07.2020 அன்று நெகமம் காவல் நிலைய குற்ற எண். 1026/2020 ச/பி 23(1)(4) of POCSO Act. 74 of JJ Act இன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று, ஜூலை 25 ஆம் தேதி வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவரை கைது செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் அவரது அடையாளங்களை ரகசியமாக காக்கும் கடமை சமூகத்தில் யாவருக்கும் உரியது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடந்த 13.07.2020 அன்று பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் “செய்தி சாரல்” என்ற தினசரி நாளிதழில் 15.07.2020 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நெகமம் காவல் நிலையத்தில் 18.07.2020 அன்று புகார் அளித்தார், அந்த புகாரை மகிளா நீதிமன்றதிற்கு அனுப்பி அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட பத்திரிக்கை ஆசிரியரின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து 22.07.2020 அன்று நெகமம் காவல் நிலைய குற்ற எண். 1026/2020 ச/பி 23(1)(4) of POCSO Act. 74 of JJ Act இன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று, ஜூலை 25 ஆம் தேதி வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவரை கைது செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் அவரது அடையாளங்களை ரகசியமாக காக்கும் கடமை சமூகத்தில் யாவருக்கும் உரியது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.