நீலகிரி: குன்னூர் காட்டேரிப் பூங்கா பகுதியில் சனிக்கிழமை உள்ளே நுழைய முயன்ற காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிகளுக்குள் விரட்டியடித்தனர்.
நீலகிரி: குன்னூர் காட்டேரிப் பூங்கா பகுதியில் சனிக்கிழமை உள்ளே நுழைய முயன்ற காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதியில் விரட்டியடித்தனர்.
நீலகிரி மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கும் மேலான நிலையில், தற்போது மலைரயில் பாதை வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக காேரைப் புற்கள் அதிக அளவு வளர்ந்துள்ளதால் யானைகள் இவற்றை உண்பதற்காக மலைரயில் பாதையில் தாெடர்ந்து முகாமிட்டுள்ளன
இந்த நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சுற்றிவந்த காட்டு யானைகள் இன்று காட்டேரிப் பூங்காவிற்குள் நுழைய முற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பூங்கா ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்டினர்.

பலாப்பழம் மற்றும் பேரிக்காய் சீசன் என்பதால், சீசன் முடிந்ததும் தானாக இந்த யானைகள் சமவெளிப் பகுதியில் உள்ள வனங்களுக்கு சென்று விடும் என்று வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கும் மேலான நிலையில், தற்போது மலைரயில் பாதை வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக காேரைப் புற்கள் அதிக அளவு வளர்ந்துள்ளதால் யானைகள் இவற்றை உண்பதற்காக மலைரயில் பாதையில் தாெடர்ந்து முகாமிட்டுள்ளன
இந்த நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சுற்றிவந்த காட்டு யானைகள் இன்று காட்டேரிப் பூங்காவிற்குள் நுழைய முற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பூங்கா ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்டினர்.
பலாப்பழம் மற்றும் பேரிக்காய் சீசன் என்பதால், சீசன் முடிந்ததும் தானாக இந்த யானைகள் சமவெளிப் பகுதியில் உள்ள வனங்களுக்கு சென்று விடும் என்று வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.