பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் அருந்ததிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி மரக்கன்று நட்டு கொண்டாட்டம்!

திருப்பூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் பாமக சார்பில் அருந்ததிய பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி மரக்கன்று நட்டு கொண்டாடப்பட்டது.

திருப்பூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் பாமக சார்பில் அருந்ததிய பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி மரக்கன்று நட்டு கொண்டாடப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும், பசுமை தாயகம் நாளை முன்னிட்டும் திருப்பூர் மாவட்ட வட்டாலபதி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார் தலைமையில் அரசு பள்ளியில் படிக்கும் அருந்ததியினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் உருவப்படம் பொறித்த டீசர்ட், முக கவசம் , நோட்டு புத்தகம் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும், இயற்கையை பாதுகாக்கவும் தற்போதுள்ள இயற்கை வளங்களை அப்படியே அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என இயற்கை உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டு சமூக இடைவெளியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டது.



இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் டாக்டர் அய்யா 81 என்று அவரது 81வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் பதாகைகளையும் உயர்த்திப் பிடித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் கிருத்திகா, முன்னாள் ஒன்றிய தலைவர் கொண்டப்பண், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் நாகலட்சுமி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...