காரமடை பகுதிகளில் நேற்று இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் 2000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் ஊரக பகுதிகளான காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது தென் மேற்கு பருவமழையானது தீவிரமாக பெய்து வருகிறது.



கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் மருதூர் ஊராட்சிக்குட்பட்ட புங்கம் பாளையம், மருதூர் கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமானது.



புங்கமபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பையன் நான்கரை ஏக்கரில் நேந்திரன் மற்றும் கதிலி வாழை விவசாயம் செய்து வந்துள்ளார். இதில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் அவரது தோட்டத்தில் மட்டுமே இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட வாழைகள் வேரோடு சாய்ந்தது சேதமாகி உள்ளது.

குறிப்பாக, நன்கு வளர்ந்து காய்விட்டு பலன் தரக்கூடிய நிலையில் இருந்த வாழைகள் முழுவதும் சேதமாகியுள்ளது. வாழை ஒன்றிற்கு 120 ரூபாய் செலவு செய்து பாதுகாத்து வந்த பயிர் ஒரே நாளில் காற்றில் முறிந்து சேதமானதால் பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...