சூலூர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் நீராபானம் இறக்க அனுமதி மறுத்து போலீசார் மிரட்டுவதாக விவசாயிகள் சங்கத்தினர் புகார்!

கோவை: சூலூர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் நீராபானம் இறக்க அனுமதி மறுத்து போலீசார் மிரட்டுவதாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை: சூலூர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் நீராபானம் இறக்க அனுமதி மறுத்து போலீசார் மிரட்டுவதாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தோட்டங்களில் நீரா பானம், பதநீர் மற்றும் கள் ஆகியற்றை இறக்க சூலூர் காவல்துறையினர் அனுமதி மறுத்து பானைகளை உடைப்பதும், பானைகளை எடுத்துச் சென்று தோட்டத்தின் உரிமையாளர்கள் மற்றும் கூலி ஆட்களை மிரட்டி செல்போனை பிடுங்கிச் செல்வது தொடர்கதையாகி வருவதாக நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

முதலமைச்சர் நீரா பானம் இறக்குவதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், கள்ளுக்கு தடை செய்வதை செயல்படுத்த முடியாது. ஏனெனில் நீரா பானம் இறக்கி அது நான்கு மணி நேரத்தில் புளிப்பு தன்மையை அடைந்து கள்ளாக மாறி விடும். இது இயற்கையின் செயல்பாடு என தெரிவித்தனர்.



இந்த நிலையில், கள் இறக்குவதாக காவல் துறையினரின் நடவடிக்கை எடுப்பது ஏற்கமுடியாது என தெரிவித்த நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர், காவல் துறையினர் விவசாயிகளிடம் நடந்து கொள்வதை கண்டித்து இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...