சென்னை: போலி இமெயில் அனுப்பியது தொடர்பான புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட சென்னை சைபர் கிரைம் போலீசார் மாரிதாஸ் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
சென்னை: போலி இமெயில் அனுப்பியது தொடர்பான புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட சென்னை சைபர் கிரைம் போலீசார் மாரிதாஸ் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
மாரிதாஸ் வெளியிட்ட நியூஸ் 18 இமெயில் மோசடியானது என ஆதாரத்துடன் வெளியாகிய நிலையில், தற்போது நியூஸ் 18 விவகாரத்தில் மோசடி மெயில் தொடர்பாக வினய் சராவகி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
மோசடி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, போலி ஆவணங்கள், போலிச் செய்திகளை பரப்புவதாக கூறி இந்தியத் தண்டனைச் சட்டம் 465, 469, 471 மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 43-ன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.




