கோவை: மேட்டுப்பாளையம் உதகை மலைப்பாதையில் சாலையின் நடுவில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த லாரியை தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
கோவை: மேட்டுப்பாளையம் உதகை மலைப்பாதையில் சாலையின் நடுவில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த லாரியை தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சரக்கு ஏற்றி கொண்டு வந்த மினி கண்டெய்னர் லாரியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து சமையல் எண்ணெய் மற்றும் மாவுகளை ஏற்றி கொண்டு கோவைக்கு உதகை சாலை வழியாக வியாழக்கிழமை மினி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது, மேட்டுப்பாளையம் உதகை சாலையில் லாரி கல்லாறு அருகே இரண்டாவது கொண்டை ஊசி பகுதிக்கு வந்த போது லாரியின் முன்பகுதியில் திடீரென தீ பற்றியது. பின்னர் அந்த தீ மளமளவென லாரி முழுவதும் பற்றி எரியத் துவங்கியது.
இதையடுத்து, உடனடியாக சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் கீழே இறங்கி ஓடியதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் லாரியுடன் சேர்த்து சமையல் எண்ணெய், சமையல் மாவுகள் என பல லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சரக்கு ஏற்றி கொண்டு வந்த மினி கண்டெய்னர் லாரியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து சமையல் எண்ணெய் மற்றும் மாவுகளை ஏற்றி கொண்டு கோவைக்கு உதகை சாலை வழியாக வியாழக்கிழமை மினி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது, மேட்டுப்பாளையம் உதகை சாலையில் லாரி கல்லாறு அருகே இரண்டாவது கொண்டை ஊசி பகுதிக்கு வந்த போது லாரியின் முன்பகுதியில் திடீரென தீ பற்றியது. பின்னர் அந்த தீ மளமளவென லாரி முழுவதும் பற்றி எரியத் துவங்கியது.
இதையடுத்து, உடனடியாக சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் கீழே இறங்கி ஓடியதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் லாரியுடன் சேர்த்து சமையல் எண்ணெய், சமையல் மாவுகள் என பல லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது.