கோவை: கோவையில் தொண்டாமுத்தூர் அருகே சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வனக் காவலரின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை: கோவையில் தொண்டாமுத்தூர் அருகே சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வனக் காவலரின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவையில் இன்று மதியம் 12.45 மணியளவில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய சரகம் சுண்ட பாளையம் – தாளியூர் ரோடு, உளியம்பாளையம் பார்வை இழந்தோர் பள்ளி அருகே சாலையின் இடது புறம் 35 ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள்(மொத்தம் ரூ.17,500) கீழே கிடந்ததை அவ்வழியாக சென்ற கோவை வன சரகம் கெம்பனூர் சுற்று வனக் காவலர் செல்வ ராஜன் கண்டெடுத்து அவற்றை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இவரது நேர்மையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் பணத்தை தொலைத்தவர்கள் உரிய அடையாளம் முகாந்திரம் கூறி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இன்று மதியம் 12.45 மணியளவில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய சரகம் சுண்ட பாளையம் – தாளியூர் ரோடு, உளியம்பாளையம் பார்வை இழந்தோர் பள்ளி அருகே சாலையின் இடது புறம் 35 ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள்(மொத்தம் ரூ.17,500) கீழே கிடந்ததை அவ்வழியாக சென்ற கோவை வன சரகம் கெம்பனூர் சுற்று வனக் காவலர் செல்வ ராஜன் கண்டெடுத்து அவற்றை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இவரது நேர்மையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் பணத்தை தொலைத்தவர்கள் உரிய அடையாளம் முகாந்திரம் கூறி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.