கொரோனா சிறப்பு கடன் பெறுவதில் தொடரும் சிக்கல்; சிறப்பு முகாம் அமைக்க, கோவை சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

கோவை: கொரோனா கால சிறப்பு கடன் ரூ.10 ஆயிரம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்க வங்கி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தலைமையில் முகாம் அமைத்து வியாபாரிகளுக்கு கடன் பெற்று தர வேண்டும், என கோவை சாலையோர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை: கொரோனா கால சிறப்பு கடன் ரூ.10 ஆயிரம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்க வங்கி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தலைமையில் முகாம் அமைத்து வியாபாரிகளுக்கு கடன் பெற்று தர வேண்டும், என கோவை சாலையோர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6,150 க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். பதிவு பெறாமல் சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கடன் பெறுவதில் சிக்கல் உள்ளதால், கடனை எளிய முறையில் பெற்று தர சம்மந்தப்பட்ட அனைத்து துறையினரும் பங்குபெறும் படி சிறப்பு அமைக்க வேண்டும், என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து, கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறுகையில்:

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கடனை வங்கிகளிடம் சென்று கேட்டால் அலட்சியம் செய்கிறார்கள். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், வங்கி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் முகாம் அமைத்து சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க எளிய வழிமுறையை கையாள வேண்டும்.

மேலும் பதிவு பெறாத சாலையோர வியாபாரிகளிடம் உரிய ஆவணங்களை பெற்று பதிவு பெற வைக்கும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...