தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் - மனித உரிமை ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி. பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி. பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் நிலைய சித்திரவதை மரணத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஓராண்டுக்கு சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து துாத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த, மனித உரிமை ஆணைய தலைவர், துரை ஜெயச்சந்திரன், தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும், அந்த நோட்டீஸில் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்u பு கேமராக்களை பொருத்த வேண்டும். எனவும், அவற்றில் பதிவாகும் காட்சிகளை ஓராண்டு வரை பாதுகாக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைப்பது தொடர்பாக விரிவான அறிக்கையை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...