குன்னூரில் 2 வது சீசனுக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி துவக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 வது சீசனுக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி இன்று துவங்கியது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 வது சீசனுக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி இன்று துவங்கியது.



நீலகிரி மாவட்டத்தில் 2 வது சீசன் தொடங்கவுள்ள நிலையில், புகழ் பெற்ற குன்னூர் சிம்ஸ் பூங்காவில் புது மலர்கள் நடவு செய்யும் பணி துவங்கியுள்ளது.

1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகளில் -- பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலர்களின் நாற்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாற்றுகளில், சில நாற்றுகள் உள்ளூரில் வகை எனவும், மற்றவை கடந்த சீசனில் மலர் செடிகளில் இருந்த விதைகளில் இருந்து சேகரித்து மொத்தம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மலர் செடிகளை தொட்டியிலும், பூங்காவிலும் நடவு செய்யும் பணிகளை இன்று தோட்டக்கலை துணை இயக்குனர் பெப்பிதா தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தோட்டக்கலை துறையினர் கூறுகையில், தற்போது நடவு செய்யப்பட்டுள்ள இந்த செடிகள் அனைத்தும் செட்பம்பர் மாதம் கடைசி வாரத்தில் பூக்கத் தொடங்கும் என தெரிவித்தனர்.

மேலும், கொரோனா தொற்று முற்றிலும் முடிந்து, இந்த ஆண்டிற்கான 2-வது சீசனுக்கு, சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...